சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் தொல்காப்பியச் செம்மல் தமிழண்ணலின் 91 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நெற்குப்பையில் உள்ள சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தமிழண்ணல் மைந்தன் பெரிசோலையப்பன் தலைமை வகித்தார்.
மேலச்சிவபுரி கணேசன் கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சா.ரியாஸ் அறிமுக உரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மகிபாலன்பட்டி சாத்தப்பச் செட்டியார் தமிழண்ணல் சிலைக்கு மாலையணிவித்துப் பேசினார்.
முன்னதாக மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வாசகர் வட்ட குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் செ.கண்ணன் வரவேற்றார். நூலக உதவியாளர் மீனாள் நன்றி கூறினார்.