அழகப்பா பல்கலை.யில் ஆக. 17 முதல் தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் வரும் ஆக. 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து அதன் இயக்குநர் (பொறுப்பு) கே. அலமேலு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் அகடமிக் இயர் 2017- 2018 மற்றும் காலண்டர் இயர் 2017, 2018 ஆண்டுகளுக்கான பி.எஸ்சி., எம்.எஸ்சி., கணிதம் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு ஆக. 17, 18, 23, 24, 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் உள்ள கணிதத் துறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு வகுப்புகள் நடைபெறும்.
அகடமிக் இயர் 2017- 2018, காலண்டர் இயர் 2017, 2018 ஆம் ஆண்டுக்கான பி.ஏ., எம்.ஏ., இலக்கியம் மாணவர்களுக்கு செப்டம்பர் 13 முதல் தொடர்பு வகுப்புகள் நடைபெறவிருக்கிறது. பகுதி 1 தமிழ் அனைத்து பி.ஏ., பி.எஸ்சி.
இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 13- ஆம் தேதியும், பி.லிட்., தமிழ் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 16- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரையிலும், எம்.ஏ. தமிழ் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரையிலும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com