இளையான்குடி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (83). இவர் வீட்டில் அரிக்கேன் விளக்கை வைத்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விளக்கு கீழே சாய்ந்து பாப்பாத்தி கட்டியிருந்த சேலையில் தீ பிடித்து அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இச் சம்பத்தில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளையான்குடி போலீஸார் இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.