சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு  ஆக. 29 இல் மாவட்ட தடகளப் போட்டி

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தடகளப்போட்டிகள் நடைபெற உள்ளது.

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி தடகளப்போட்டிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் செ.அசோக் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் பிறந்த தினம் (ஆக. 29) தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில் வரும் 29 ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளது. 
இதில் மாணவர்களுக்கு 200, 800, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 110 மீட்டர் தடைஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. மாணவிகளுக்கு 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் 
வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 94873 69155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது 
பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித் துறைத் தலைவர் ஏ.ஜான்சன் செய்து வருகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com