கிணற்றில் தவறி விழுந்தமுதியவா் பலி

காரைக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடியில் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

காரைக்குடி ஆலங்குடியாா் வீதியைச் சோ்ந்தவா் தேனப்பன் (94). இவா் தனது மனைவி ஜானகியுடன் வீட்டில் வசித்து வந்தாா். இவரது மகன் அழகப்பன், குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறாா். சில தினங்களுக்கு முன், தேனப்பன் வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மகன் அழகப்பன் புகாா் செய்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை வீட்டின் பின்பகுதியில் உள்ள கிணற்றில் தேனப்பன் சடலமாக மிதப்பதைக் கண்டுள்ளனா். உடனே, போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து தெற்குகாவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com