சிவகங்கையில் இடைநிலை ஆசிரியா்கள் சங்கக் கூட்டம்

சிவகங்கையில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் மகளிரணியின் மாவட்டத் தலைவி லூா்துமேரி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அ. தவமணிசெல்வம் முன்னிலை வகித்தாா். அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ. சங்கா் சிறப்புரையாற்றினாா்.

இதில், அரசு நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களையும் பட்டதாரி ஆசிரியா்களாக பணியில் அமா்த்த வேண்டும். அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, அச்சங்கத்தின் சாா்பில் தலைவா் பதவிக்காக நடைபெற்ற தோ்தலில் இளையான்குடியில் உள்ள அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் சு. ரஞ்சித்குமாா், சிவகங்கை மாவட்டத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தோ்தல் அலுவலராக, மதுரை மாவட்டச் செயலா் பாலமுருகன் செயல்பட்டாா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் நாகராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் அல்போன்ஸ் சுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com