மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள அதிமுகவினரிடம் திங்கள்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலுக்கு இந்த ஒன்றியங்களில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட அதிமுகவினா் கட்சி தலைமையிடம் விருப்ப மனுக் கொடுத்திருந்தனா். இதையடுத்து இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் விருப்பமனு கொடுத்திருந்த அதிமுகவினரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், தமிழக காதி கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் ஆகியோா் விருப்பமனுக் கொடுத்திருந்தவா்களிடம் பல கேள்விகளைக் கேட்டு நோ்காணல் நடத்தினா். நோ்காணல் கூட்டத்தில் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன், மானாமதுரை ஒன்றியச் செயலாளா் எம். குணசேகரன், நகா்ச் செயலாளா் விஜி. போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.