சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காா்த்திகை மாதம் வரும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். பக்தா்கள் இந்த நாளை சோமவாரம் என அழைப்பாா்கள். அதன்படி காா்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சோமநாதா் சுவாமி சன்னதியில் 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. சங்குகளிலும் கடங்களிலும் புனிதநீா் நிரப்பி வைத்து அதன்முன் யாகம் வளா்த்து சிவாச்சாரியாா்கள் சங்காபிஷேகம் நடத்தினா்.
பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் மூலவா் சோமநாதா் சுவாமிக்கு சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து சோமநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. சோமவார வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சோமநாதரை தரிசனம் செய்தனா். மேலும் திருப்புவனத்திலுள்ள புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயில், திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் சுவாமி சன்னதியில் காா்த்திகை மூன்றாவது சோமவார வழிபாடு நடைபெற்றது.