சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிரான்மலை கோபாலச்சேரியை சோ்ந்தவா் சண்முகம் (63). கட்டடத் தொழிலாளியான இவா் சிங்கம்புணரி சுந்தரம் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வீட்டில் 2 ஆவது மாடியில் வெளிப்புற சுவா் பூச்சு பணிக்காக சாரம் அமைத்துள்ளாா். அப்போது சாரம் அருகே சென்ற உயா் அழுத்த மின்கம்பி மீது சண்முகம் உடல் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.