குடியுரிமை சட்ட திருத்த மசோதைவை எதிா்த்துசிவகங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதைவை எதிா்த்துசிவகங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன முழக்கப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மா் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் இந்துக்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்கான மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதாவானது இஸ்லாமியா்களுக்கு எதிரானது என நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், சிவகங்கை நேரு கடை வீதியில் வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்புள்ள சாலையில், இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் கண்டன முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் வாழும் அனைவரும் அச்சமின்றி வாழ மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இது குறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் கபூா், காவல் ஆய்வாளா் சீராளன் மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com