சிவகங்கை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிவகங்கையில் சனிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சோ்ந்த 151 பெண்கள் உள்பட 290 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ரபீக் முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சாகுல், மாவட்டப் பொருளாளா் முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் தஞ்சை முஜீப் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். இதில் மாவட்ட துணைத் தலைவா் அப்துல் சித்திக், மாவட்ட துணைச் செயலா்கள் சம்சுதீன், சேக் தாவூத்தீன், மாவட்ட மாணவரணிச் செயலா் முகமது இஸ்மாயில் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதையறிந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சோ்ந்த 151 பெண்கள் உள்பட 290 பேரை கைது செய்தனா். 2 மணி நேரத்துக்கு பின்னா் அனைவரையும் விடுதலை செய்தனா்.