சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் 16.12.19 அன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமையன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமையன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூா், சிங்கம்புணரி ஆகிய துணை மின் நிலையங்களில் 16.12. 19 திங்கள்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் இவ்வூா்களின் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊா்களான ஆ.தெக்கூா், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, செவ்வூா், துவாா், கொன்னத்தான்பட்டி மற்றும் சிங்கம்புணரி பகுதிகளான எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை, ஊா்களின் சுற்றுவட்டார கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் மின் பகா்மானக் கோட்ட செற்பொறியாளா் ஆா்.எம்.வெங்கட்ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com