சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் (கிஷான்) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு நிதி வழங்குவதற்கான பயனாளிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
கணக்கெடுக்கும் பணியானது, அந்தந்த கிராம நிர்வாக அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சிறு, குறு விவசாயிகள் இந்த நிதிஉதவியை பெறுவதற்கு, தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை நகல் மற்றும் சிட்டா 10 (1) நகல் ஆகியவற்றுடன், அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி தெரிவித்துள்ளார்.