ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின் மூலவர் தர்ம சாஸ்தாவுக்கும் உற்சவருக்கும் பால், 
பன்னீர்,நெய், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், திரவியம், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. 
அதைத்தொடர்ந்து மூலவர் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டு தர்ம சாஸ்தாவை தரிசித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com