காரைக்குடியில் தொழிலதிபர் எம்.ஏ. சிதம்பரம் நூற்றாண்டு விழா

காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் சென்னை முன்னாள் மேயரும், தொழிலதிபருமான எம்.ஏ. சிதம்பரம்

காரைக்குடி தொழில் வணிகக்கழகம் சார்பில் சென்னை முன்னாள் மேயரும், தொழிலதிபருமான எம்.ஏ. சிதம்பரம் நூற்றாண்டு விழா காரைக்குடி கம்பன் மணி மண்டப அரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகப் புரவலர் சத்தி அ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் காசி விசுவநாதன், பொருளாளர் சுப. அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அரசின் அண்ணா விருது பெற்றவரும், எழுத்தாளருமான பேராசிரியர் அய்க்கண், மதுரை தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் என். ஜெகதீசன், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் ஆகியோர் பேசினர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார். 
முன்னதாக முனைவர் தேவகி முத்தையா குத்துவிளக்கேற்றி வைத்தார். காரைக்குடி தொழில் வணிகக் கழகத்திற்கு புதிய மின்னாக்கி இயந்திரம் வாங்குவதற்கு அதன் தலைவர் மற்றும் செயலாளரிடம் சென்னை எம்.ஏ.சி அறக்கட்டளை சார்பில் ரூ.3.25 லட்சத்துக்கான காசோலையை தொழிலதிபர் ஏ.சி. முத்தையா வழங்கினார்.
இதில் காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் முன்னாள் தலைவர் எஸ்.வி.என். நாகப்பனின் சிறப்பான பணியைப் பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டார். தொழில் வணிகக் கழகத்தின் துணைத் தலைவர்கள் எம்.எஸ்.பி. ராகவன் செட்டியார், கேஎல். பெரியதம்பி, துணைச்செயலாளர்கள் ஏஆர். கந்தசாமி, என். நாச்சியப்பன், எஸ். சையது, அதிமுக நகரச் செயலாளர் சோ. மெய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி வரவேற்றார். முடிவில் தொழில் வணிகக்கழகச் செயலாளர் வ. வெங்கடாசலம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com