பிளஸ் 2 தனித் தேர்வர்கள் இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.பாலுமுத்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனித் தேர்வர்கள்
(தட்கல் தேர்வர் உள்பட) தங்களது தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை வெள்ளிக்கிழமை முதல்  ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மேலும் பழைய பாடத்தின்படி (மொத்தம் 1200 மதிப்பெண்கள்) தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் மட்டும் மொழிப் பாடங்களில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். 
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com