முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 28th February 2019 07:53 AM | Last Updated : 28th February 2019 07:53 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் ஆர்.மணிகணேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலை தேடும் இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.