முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
காரைக்குடி பகுதியில் ஜனவரி 5 மின்தடை
By DIN | Published On : 04th January 2019 01:38 AM | Last Updated : 04th January 2019 01:38 AM | அ+அ அ- |

காரைக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 5) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி, அரியக்குடி, பேயன்பட்டி, செக்காலைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று மின் பகிர்மானக் கழக காரைக்குடி உதவிச்செயற்பொறியாளர் பிஆர். உலகப்பன் தெரிவித்துள்ளார்.