பொங்கல் விழா: கீழச்சிவல்பட்டியில் மண் பானைகள் விற்பனை அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழச்சில்பட்டியில் பொங்கலை முன்னிட்டு விற்பனைக்காகத் மண்பானைகள் உள்பட மண்பாண்டப் பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 


சிவகங்கை மாவட்டம் கீழச்சில்பட்டியில் பொங்கலை முன்னிட்டு விற்பனைக்காகத் மண்பானைகள் உள்பட மண்பாண்டப் பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. 
பொங்கல் பானை ரூ.80 லிருந்து 500 வரை பல்வேறு ரகங்களில் விற்கப்படுகின்றன. மேலும் சட்டிகள், தண்ணீர் குடுவைகள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட வகைகளில் மண்பாண்டப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மண்பாண்ட வியாபாரி சித்ராதேவி கூறியது: இளையாயன்குடியில் 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
மானாமதுரை, வந்தவாசி, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் மண்பாண்ட பொருள்களை வாங்கி கீழச்சிவல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகிறோம். பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் இங்கு மொத்தக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மக்கள் பொங்கல் பானை, மண்அடுப்பு, மூடி, உண்டியல், மலர்த் தொட்டி மற்றும் கிராமப் பானை எனப்படும் பெரிய அளவிலான மண்பானைகளை வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com