சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்த இந் நிகழ்ச்சியில் பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அண்ணாசிலை, வைகை மேம்பாலம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் கைகளைக் கோர்த்து நின்று மனிதசங்கிலி அமைத்து, புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.