தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டது.
மோயன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி காளிஸ்வரி (28). இவர் பொங்கல் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை அருகில் உள்ள சின்னமரத்துகாளியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு வீட்டிற்கு வந்த போது பேருந்து நிறுத்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சருகனிக்கு வழி கேட்பது போல் காளிஸ்வரியிடம் கேட்டுள்ளனர். அப்போது மர்மநபர்கள் காளிஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து முருகேசன் வேலாயுதபட்டினம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.