மானாமதுரை ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி பூஜை

மானாமதுரையில் அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி பூஜை

மானாமதுரையில் அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அதன்பின் மூலவர் தர்மசாஸ்தாவுக்கும் உற்சவருக்கும் பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமி வெள்ளிக்கவசத்திலும் மலர் அலங்காரத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு ஆராதனைகள், பலவகை தீபாராதனைகள் நடந்தன. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தர்மசாஸ்தாவை தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com