மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தெருவுக்கு ஒரு மின்மாற்றி அமைக்க முடிவு

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சீரான மின் விநியோகத்துக்கு தெருவுக்கு ஒன்று

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சீரான மின் விநியோகத்துக்கு தெருவுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மின்மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடந்து வருகிறது.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊர்களில் தற்போது ஒவ்வொரு வார்டு வாரியாக மின்மாற்றி உள்ளது. இதனால் அவற்றில் பழுது ஏற்படும்போது அந்த வார்டு பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பழுது சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படும். மேலும் குறைந்தழுத்த, அதிக மின் அழுத்த பிரச்னையால் அடிக்கடி மின்மாற்றிகள் பழுதடைந்து வந்தன. இதனால் வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் பழுதாகும் நிலையும் தொடர்ந்து இருந்து வந்தது.
இதையடுத்து நகர் பகுதிகளில் மின்மாற்றிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மின்வாரிய நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்படி மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் தெருவுக்கு ஒரு மின்மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக மானாமதுரை நகர் பகுதியில் ஏற்கெனவே 20 மின்மாற்றிகள் இருந்து வந்த நிலையில் தற்போது கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பழுதான மின்மாற்றிகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
இதேபோல் திருப்புவனம், இளையான்குடி நகர் பகுதியிலும் தெருவுக்குத் தெரு மின்மாற்றிகள் அமைக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com