கிருங்காகோட்டையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் முப்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் பொங்கல் விழா, பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.  
இவ்விழாவுக்கு  தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செ.சரவணன், செ.ஆறுமுகம், வெ.செல்லையா, வெ.ஜீவானந்தம், வெ.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் பொங்கல் விழாவையொட்டி சிறுவர் சிறுமியர் ஓட்டப்பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஊசிநூல் கோர்த்தல், இசைநாற்காலி, கோலப்போட்டி, மற்றும் பேச்சுப்போட்டி, கவிதை, பாடல் ஆகியவை நடைபெற்று பெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கபட்டன. 
மேலும் அரசுப் பொதுத் தேர்வில் முதல், 2 ஆம் மற்றும் 3 ஆம் இடம் பிடித்த மாணவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. 
தொடர்ந்து சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றமைக்காக முனைவர் கிருங்கை சேதுபதிக்கும், குத்துச்சண்டை போட்டியில் மாநிலத்தில் 2 ஆம் இடம்பிடித்த மாணவி கோ.பிரியதர்சினிக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
 நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம.அருணகிரி, வழக்குரைஞர்.ச.எழிலரசு, குமரன், தமிழ்க்குமரன், முத்துப்பாண்டி, ஆறுமுகம், சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினர். 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செ.ஆறுமுகம், பழ.வள்ளியின்செல்வன், வானதிபாரிதாசு, நதியா ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக  லெ.அன்புச்செழியன் வரவேற்றார்.  நிர்வாகி சா.பாரூக்முகமதுஅலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com