சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூலை 3) அப் பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூர், மேலமங்களம், கீழமங்களம், பிரவலூர், பர்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனூர், ஒக்கூர், காடனேரி, அலவாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. சிவகங்கை மின் பகிர்மானக்கழக செயற்பொறியாளர் ஆர்.வீரமணி இத்தகவலை திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.