திருப்புவனம் அருகே பைக் மீது கார் மோதல்: பெண் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். தலைமைக் காவலர் காயமடைந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். தலைமைக் காவலர் காயமடைந்தார்.
திருப்புவனம் அருகே பனையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோசலை (55). மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). இவர் மதுரையில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார்.  கோசலையும், சிவக்குமாரும் உறவினர்கள். 
இந்நிலையில் சிவக்குமார் வீட்டுக்கு வந்த கோசலையை மீண்டும் பனையனேந்தல் கிராமத்தில் கொண்டு வந்து விடுவதற்காக, அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சிவக்குமார் திருப்புவனம் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தார்.
திருப்புவனம் புறவழிச்சாலையில் வன்னிக்கோட்டை விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. 
இதில் கீழே விழுந்த கோசலை தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சிவக்குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர்  திலீப்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com