திருக்கோளக்குடி திருக்கோளநாதர்கோயில் ஆனித் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடி திருக்கோளநாதர் சமேத ஆத்ம நாயகியம்மன் கோயிலில்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடி திருக்கோளநாதர் சமேத ஆத்ம நாயகியம்மன் கோயிலில்  ஆனித் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குள்பட்ட திருக்கோளக்குடி ஆத்மநாயகி அம்மன் சமேத திருக்கோளநாதர் ஆலயத்தில் ஆனிப் பெருந்திருநாள் விழா ஜூலை 5 ஆம் 
தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தொடர்ந்து  ஜூலை 8 இல் குன்றக்குடி அடிகளார் குருமகா சன்னிதானம் மண்டகப்படியும்,  ஜூலை 9 இல் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 
தொடர்ந்து சனிக்கிழமை தேரோட்டத்தையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. காலை 10  மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கானாடு, கல்வசநாடு, கோநாடு,  திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, கோட்டையிருப்பு, சிங்கம்புணரி மற்றும் இடச்சிஅம்மன் கோயில் பங்காளிகள்,  சுற்றுப்புற கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com