திருப்புவனம் பகுதியில் ஜூன் 25 மின்தடை
By DIN | Published On : 24th June 2019 07:28 AM | Last Updated : 24th June 2019 07:28 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : திருப்புவனம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், திருப்புவனம், தி.புதூர், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், மாரநாடு, குருந்தங்குளம், ஆனைக்குளம், முதுவன்திடல், பாப்பாங்குளம், பழையனூர், அழகுடையான், சங்கங்குளம், பிரமனூர், வன்னிகோட்டை, வயல்சேரி, அல்லிநகரம், நைனார்பேட்டை, கலியாந்தூர், கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூர், கீழடி, கழுகேர்கடை, தட்டான்குளம், மடப்புரம், பூவந்தி, கலுங்குபட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.