சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 28-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
   இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
  இதில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2019-2020 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுவது, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் தடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியன குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தி, தீர்மானமாக நிறைவேற்றலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com