திருப்புவனம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். 
 திருப்புவனம் அருகே உள்ள மணலூர் கிராமத்தில் ஆதரவற்ற 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்தப் பகுதி பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இவர் மணலூர் பாலத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com