காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ. படிப்புக்கான தொடர்பு வகுப்புகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ. படிப்பில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான இரண்டாவது பருவமுறை மாணவர்களுக்கு தொடர்பு வகுப்புகள் மார்ச் 4 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலும், மார்ச் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்த வகுப்புகள், காரைக்குடியில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று, தொலைநிலைக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.