திருப்புவனத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேர் கைது

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற 23 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலர் செந்தில் தலைமையில், அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேர் திருப்புவனம் ரயில் நிலையம் அருகே மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் செல்லும் பயணிகள் ரயிலை மறிப்பதற்காக நின்றிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com