தேவகோட்டை யில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதற்கு அதன் வட்டாரத் தலைவர் ஆர். ஜோசப் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.புரட்சித்தம்பி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தேவகோட்டை ஒன்றியத்திற்குள்பட்ட பள்ளிகள் அனைத்தும் கிராமப் புறங்களில் அமைந்திருக்கிறது. ஆசிரியர், மாணவர்
வருகையை ஆன்லைனில் பதிவு செய்யும் போது சர்வரில் கோளாறு ஏற்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் அனைத்து செல்லிடப்பேசி சேவை நிறுவளங்களுக்கும் சிக்னல் கிடைப்பதில்லை. எனவே, தமிழக அரசு நவீன செல்லிடப்பேசி வழங்குவதோடு, போதிய இணையதள வசதி செய்து தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .