மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (70). இவருடைய சகோதரி ஆனந்தவல்லிக்கு சிவகங்கை மாவட்டம் குவளைவேலியில் சொந்தமாக 3 ஏக்கர் 6 சென்ட் புஞ்சை நிலம் இருந்ததாம். இந்நிலையில் ஆனந்தவல்லி கடந்த 27-7-1976 இல் இறந்து விட்டாராம்.
இதையடுத்து குவளைவேலி கிராமத்தைச் சேர்ந்த பாரி (51) தன்னுடைய தாயாரான அக்கம்மாள் (76) ஆகிய இருவரும் சேர்ந்து போலியாக பத்திரம், பட்டா தயார் செய்து சிவகங்கை பொற்கைபாண்டியன் தெருவைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்து விட்டனராம்.
இதுபற்றி தகவலறிந்த ஜெயலெட்சுமி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரனிடம் அண்மையில் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து பாரியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.