கச்சநத்தம் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் கடந்தாண்டு நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்

சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் கடந்தாண்டு நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் திருப்பாச்சேத்தி அருகே கடந்த சனிக்கிழமை இரவு  மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை காலை கண்மாயிலிருந்து மீட்கப்பட்டது. 
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்தாண்டு மே மாதம் ஒரு தரப்பைச் சேர்ந்த 3 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இக் கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாமணி மகன் அருண்பாண்டி என்ற பிரசாத் (20)  உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
தற்போது அருண்பாண்டி என்ற பிரசாத் (20), குடும்பத்துடன் சிவகங்கையில் வசித்து வந்தார். இந்நிலையில் பிரசாத் வேம்பத்தூர் அருகே பி.வேலாங்குளம் கிராம கண்மாயில் கருவேல மரங்களுக்கிடையில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தகவல் அறிந்த திருப்பாச்சேத்தி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரசாத் சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com