கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 30th March 2019 07:44 AM | Last Updated : 30th March 2019 07:44 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சொக்கநாத இருப்பில் உள்ள சக்தி வீரமாகாளியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த மார்ச் 20 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய விழாவான வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்துக்கு பின் விஷேச தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில், சொக்கநாதஇருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...