காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (மே 4) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீ ராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவாங்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று, காரைக்குடி கோட்டச் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.