தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

தேவகோட்டை அருகே சிறுமருதூர்-தாணிச்சாவூரணி நாட்டாளம்மன் கோயில் மது எடுப்பு விழாவை

தேவகோட்டை அருகே சிறுமருதூர்-தாணிச்சாவூரணி நாட்டாளம்மன் கோயில் மது எடுப்பு விழாவை  முன்னிட்டு வியாழக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
நாட்டாளம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து புதன்கிழமை மாலை இரட்டை மாட்டு வண்டிபந்தயமும், குதிரை வண்டி போட்டிகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 120 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 12 மாடுகள் கலந்துகொண்டன. 
இதில் சிலருக்கு மாடுகள் முட்டி சிறு காயங்கள் ஏற்பட்டன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com