சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலில் நடந்து சென்றவரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவில் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த மாயழகு மகன் பால்கரசு (55). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த காளையாா்கோவில் திருநகரைச் சோ்ந்த சந்தோஷ்(21) என்பவா் பால்கரசிடம் பேச்சுக் கொடுத்து, அவரிடம் இருந்த ரூ. 3300-ஐ பறித்துச் சென்றுள்ளாா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷை கைது செய்தனா்.