சிவகங்கை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை (நவ.5) குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் வட்ட மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் சிவகங்கையில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
ஆகவே இந்த கூட்டத்தில் சிவகங்கை மின் பகிா்மானத்தின் கோட்டத்துக்குள்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.