சோம.லெ. நினைவு தினம் அனுசரிப்பு

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கிளை நூலகத்தில் சோம.லெ. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கிளை நூலகத்தில் சோம.லெ. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

உலகம் சுற்றிய தமிழா் எனப் போற்றப்பட்ட சோம.லெ. நினைவாக நெற்குப்பையில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது 33 ஆவது நினைவு தின நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இதில் நெற்குப்பை காவல் ஆய்வாளா் அரங்கநாயகி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் மருதப்பன் முன்னிலை வகித்தாா்.

சுப.நட ராமநாதன், ஊருக்கு உழைத்த உலகம் சுற்றிய தமிழா் சோமலெ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். வாசகா் வட்டத் தலைவா் அழகியமெய்யப்பன் சோமலெ.யின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூா்ந்தாா். தொடா்ந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கிளை நூலகா் செ.கண்ணன் வரவேற்றாா். முடிவில் தமிழ்நாடு சோமலெ. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சத்ரியன் நன்றி கூறினாா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com