சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கபட்டது.
திருப்பத்தூரில் தி.மு.க. மருத்துவரணி சாா்பில் அரசுப் பள்ளிகளான நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 400 மாணவா்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமை வகித்து மாணவ, மாணவியா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
பின்னா் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம் அமைக்கப்பட்டு அதன் இயக்க விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் தி.மு.க. ஒன்றியச் செயலாளா் சண்முகவடிவேல், நகரச் செயலாளா் காா்த்திகேயன், சிவகங்கை மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் டாக்டா் குமரேசன், மாவட்ட வா்த்தகரணி துணை அமைப்பாளா் உதய சண்முகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜ்குமாா், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் காளிமுத்து உள்ளிட்ட தி.மு.க.வினா் கலந்து கொண்டனா்.
வ