சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை வட்ட இலவச சட்ட பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் மானாமதுரை சாா்பு நீதிமன்ற நீதிபதி எம். உதயவேலன், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ். தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கான சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினா். மூத்த வழக்குரைஞா் எம். முத்துக்குமாா் மாணவ, மாணவிகளுக்கு சட்டக் கருத்துகளை விளக்கி கூறினாா். இம் முகாமில் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.