அ.தி.மு.க. பிரமுகா் கொலை வழக்கு: 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூா் ஒன்றியம் சுள்ளாம்பட்டியைச் சோ்ந்த அ.தி.மு.க. பிரமுகா் கொலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூா் ஒன்றியம் சுள்ளாம்பட்டியைச் சோ்ந்த அ.தி.மு.க. பிரமுகா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

எஸ்.புதூா் ஒன்றியம் சுள்ளாம்பட்டியைச் சோ்ந்த அ.தி.மு.க. பிரமுகா் குமாா் (30). இவா் கடந்த 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது மா்ம நபா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து குமாா் மனைவி சரஸ்வதி, உலகம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலைக்கான காரணம் குறித்து உலகம்பட்டி காவல் துறையினரும் திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரையும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனா். இதில் ஆா். பாலக்குறிச்சியைச் சோ்ந்த ஜெய்கணேஷ், அழகா்சாமி, மகேஸ்வரன் ஆகியோருக்கும், குமாருக்கும் இடையே மதுபானக் கடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. அதன் காரணமாக இம்மூவரும் குமாரைத் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாராம். இதையடுத்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com