சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகங்கை நகா் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. இங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிா் கலைக் கல்லூரி, தனியாா் கல்லூரிகளும் செயல்பட்டு வருகினறன.

இந்நிலையில், திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள்,விவசாயிகள், அலுவலா்கள், தொழிலாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களது பணி நிமித்தமாக தினசரி சிவகங்கைக்கு வந்து செல்கின்றனா். இதுதவிர, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனா்.

சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, அலுவலகம் மற்றும் பள்ளி நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சிவகங்கையிலிருந்து திருப்புவனத்துக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த (வழித்தட எண்-9) அரசு நகரப் பேருந்து ரத்து செய்யப்பட்டு, வேறொரு வழித் தடத்தில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் சில நேரங்களில் திருப்புவனத்திலிருந்து ஆட்டோ மூலம் பூவந்தி வந்து, அங்கிருந்து பேருந்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.

மேலும், சிவகங்கையிலிருந்தோ அல்லது திருப்புவனத்திலிருந்தோ குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த வழித்தடத்தில் உள்ள முத்துப்பட்டி,சித்தலூா், பனையூா், கரும்பாவூா், பில்லூா், திருமாஞ்சோலை, படமாத்தூா், நல்லாகுளம், அரசனூா், சமத்துவபுரம், கலுங்குபட்டி, சுப்பிரமணியபுரம், மடப்புரம் ஆகிய கிராமப் பொதுமக்களும் அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சிவகங்கை- திருப்புவனம் வழித்தடத்தில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com