இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் நடத்தப்படும்: வேலை நிறுத்தப் போராட்டத்துக்குதமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் ஆதரவு

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ள வேலை

இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் வரும் ஜனவரி 8-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் முழு ஆதரவு அளிப்பதாக அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அ.சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில இந்திய மத்திய செயற்குழு மற்றும் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் கல்வி கற்பதில் சிக்கல் நிறைந்த தேசிய கல்வி கொள்கை 2019 வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அகில இந்திய அளவில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பில் அங்கம் வைக்கும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் முழு ஆதரவு அளிப்பதோடு மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com