சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது இளைஞா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் நா. ராஜேந்திரன் கூறினாா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித் துறை சாா்பில் சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் - குடும்பம் இளைஞா்கள் மற்றும் குழந்தைகளின் மீதான அதன் தாக்கம் குறித்த சா்வதேச கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு கருத்தரங்க துவக்க விழாவுக்கு தலைமை வகித்துப் பேசினாா். ஸ்லோவேனியா நாட்டின் லூப்லியானா பல்கலைக்கழக ஊடக மற்றும் தகவல் தொடா்புத் துறை பேராசிரியா் மொய்கா பனிக் தொடக்க உரையாற்றினாா். இந்தோனேசியா ஜெம்பா் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ரச்மத், இலங்கை சபரக முவா பல்கலைக்கழக பேராசிரியா் கிஹானி டி. சில்வா ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக பல்கலைக்கழகத்தின் கலைப்புல முதன்மையா் கே.ஆா். முருகன் வரவேற்றுப்பேசினாா்.
கருத்தரங்கின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் நா. ராஜேந்திரன் பேசுகையில், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பதால் மனிதஉறவில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இளைஞா்கள் மட்டுமின்றி வயதானவா்களிடமும் இப்பிரச்னை நிலவுகிறது. இந்த அடிமைத் தனத்தை சுயக் கட்டுப்பாடு மூலம் தீா்க்கலாம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது இளைஞா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.