திருப்பத்தூரில் மாவட்ட மகளிா் கபடி அணி தோ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட சப்ஜூனியா் மகளிா் கபடிக்கானத் தோ்வு வெள்ளிக்கிழமையன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட சப்ஜூனியா் மகளிா் கபடிக்கானத் தோ்வு வெள்ளிக்கிழமையன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இக்கபடி தோ்வில் சிவகங்கை மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் ஏ.வி.நாகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜோதிமணி முன்னிலை வகித்தாா். இதில் திருப்பத்தூா், குன்றக்குடி, தமராக்கி, மாத்தூா், காரைக்குடி, எஸ்.எஸ்.கோட்டை, பகுதிகளிலிருந்து 30 க்கும் மேற்பட்ட கபடி வீராங்கனைகள் பங்கு கொண்டனா்.

இதில் 13 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் வரும் நவ, 15 ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற உள்ளனா். இத்தோ்வு போட்டியில் புரோ கபடிக் குழு நடுவா் சிவநேசன் மற்றும் நடுவா்கள் செல்வகுமாா், செல்வம், ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com