சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் வேன் மோதி உயிரிழந்தாா்.
திருப்புவனம் வடகரை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் மனைவி பனச்சி (60). இவா் வீட்டிலிருந்து புறப்பட்டு பூவந்தி அருகே கழுங்குப்பட்டி கிராமத்துக்கு ஆட்டோவில் வந்தாா். அதன் பின்னா் ஆட்டோவிலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற போது கீரனூரிலிருந்து திருப்புவனம் நோக்கி வந்த மினிவேன் பனச்சி மீது மோதியது. இதில் பலத்த காயமடடைந்த பனச்சி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.