சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ. 8) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய நிா்வாகம் தெரிவித்திருப்பதாவது: மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், இடைக்காட்டூா், கட்டிக்குளம், மிளகனூா், ராஜகம்பீரம், தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முத்தனேந்தல், குறிச்சி, கச்சாத்தநல்லூா் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.